விளக்கம் கேட்கும் பேரறிவாளன்: சஞ்சய் தத்தை எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பேரறிவாளன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள் என மத்திய உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டது தமிழக அரசு. மத்திய புலனாய்வு துறை இந்த வழக்கை விசாரித்ததால் இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2015 டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதே போல் மத்திய புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரிக்கு, பேரறிவாளன் 4 கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பினார். இதுவரை மத்திய அரசு எத்தனை தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது? மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை மத்திய புலனாய்வுத்துறை தான் விசாரித்தது. இதில் ஆயுதம் வைத்து இருந்ததாக நடிகர் சஞ்சய்தத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை மராட்டிய மாநில அரசு குறைத்து, அவரை விடுதலை செய்துள்ளது. சஞ்சய்தத் எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்? என பேராறிவாளன் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு இன்று வரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய உள்துறை இணை செயலரிடம் மேல்முறையீடு செய்து கடந்த 6-ஆம் தேதி பேரறிவாளன் கடிதம் அனுப்பியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment