50 கோடி மதிப்புடைய சிலைகள் கடத்தல் : பிரபல நடிகை சிக்கினார்

Share this :
No comments


சிலை கடத்தல் வழக்கில் பிரபல நடிகைக்கு தொடர்பு உள்ளதால், அவரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சிலைகள் கடத்தி, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பல லட்சம் மிதிப்பு கொண்ட பல சிலைகள் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அப்போது, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கோடிக்கணக்கான மதிப்பு உள்ள இரும்பு மற்றும் கற்களால் உள்ளிட்ட 43 சுவாமி சிலைகளை போலீசார் பறிமுல் செய்தனர். சிலை கடத்தல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான வீட்டின் உரிமையாளர் தீனதயாளனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அத்துடன், அங்கு பிரபல நடிகை ஒருவர் அடிக்கடி வந்து செல்வதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த நடிகைக்கும், சிலை கடத்தில் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நடிகை குறித்த விவரத்தை போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.

No comments :

Post a Comment