பாகிஸ்தான் பிரதமரை 62 லட்சத்திற்கு விற்ற இணையதளம்
பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களை இணையதள விற்பனை நிறுவனமான ஈபே 62 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த இணையதளம், ‘உபயோகமற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்’ என்ற தலைப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரிஃப் விற்பனைக்கு. இனிமேல் அவர் பயன்படமாட்டார். வாங்குவதற்கு நிபந்தனைகள் எதுவும் கிடையாது. வாங்குபவரே எடுத்துச் செல்லவேண்டும். விற்பனை செய்பவர் விற்பனைப் பொருளைத் தொட ஆயத்தமாக இல்லை. அவரை இன்று முதல் மத்திய லண்டனிலிருந்து கூட்டிச்செல்லலாம். விற்பனை முடிந்தபின் முகவரி தரப்படும். வாங்குபவர் அவசியம் தங்களது சொந்த ஏற்பாட்டில் எடுத்துச் செல்லவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவாஸ்செரீப் தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment