வாய் மூடி மவுனியாக இருந்த கருணாநிதி: ஜெயலலிதா ஆவேசம்

Share this :
No comments

வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அருப்புக்கோட்டையில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஜெயலலிதா கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசினார். இதில் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடினார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது வாய் மூடி மவுனமாக இருந்தவர் கருணாநிதி என்று குற்றம் சாடினார். அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் கச்சத்தீவு நம்மை விட்டு சென்றிருக்காது இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்படுவதை தடுக்க தவறியவர் கருணாநிதி என சாடினார் ஜெயலலிதா. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் கச்சத்தீவு மீட்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை மீட்கப்படும் என ஜெயலலிதா உறுதியளித்தார்.

No comments :

Post a Comment