ஜெயலலிதா சிறை செல்வது உறுதி - சுப்பிரமணிய சாமி
ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டது. இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment