பன்னீர் ப்ரைடு இட்லி
இட்லி -8
பெரிய வெங்காயம்-2
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
குடை மிளகாய் -1
பன்னீர் -100 கிராம் (சிறுதுண்டுகளாக)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
சாம்பார் தூள்- 2 ஸ்பூன்
Step 1
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,குடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
Step 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,சாம்பார் தூள்,பன்னீர்,உப்பு போட்டு வதக்கவும்.
பின்பு அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அதில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.எதோ சுவையான பனீர் ப்ரைடு இட்லி ரெடி.
Labels:
recipes
No comments :
Post a Comment