ஜெயலலிதாவுக்காக வாய்ஸ் கொடுத்த வைகோ

Share this :
No comments


தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதும் கடிதங்களை குப்பைக்கு செல்கிறது என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட மன்றத் தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கத் தவறிய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது.இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரக்கு எழுதும் கடிதங்கள் குப்பைக்கு செல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

No comments :

Post a Comment