கருணாநிதி கூட்டத்தில் துப்பாக்கியால் பரபரப்பு

Share this :
No comments


திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அவரின் பாதுகாவலர் தொண்டர்களை நோக்கி துப்பாக்கி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

கருணாநிதி தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

கடந்த 26ஆம் தேதி அவர் தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டனர். கருணாநிதி மேடையை நோக்கி செல்லும் போது, அவருக்கு கை கொடுக்க உடன் பிறப்புக்கள் முயன்றனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிக்கிய கருப்புபடை பாதுகாப்பு வீரர் ஒருவர் கருணாநிதியின் மீதி விழப் பார்த்து சுதாரித்தார். இதனால் கோபமடைந்த அவர், தொண்டர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்பது போல் பாவனை செய்தார்.

இதனால் பயத்தில் பீதியடைந்த தொண்டர்கள் நாலா புறமும் தெறித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் கருணாநிதி மேடையேறி பேசி விட்டு சென்றார்.

No comments :

Post a Comment