சசிகுமார் நடிப்பில் வெளிவந்த வெற்றிவேல் படத்தை லைக்கா வெளியிட்டது நினைவிருக்கலாம். படம் வெற்றி என்று டமாரமடித்தாலும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பல லட்சங்கள் நஷ்டப்படுத்தியிருக்கிறது.

லைக்கா ஜீ.வி.பிரகாஷை வைத்து தயாரித்திருக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை இந்த மாதம் வெளியிட திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் இறங்கியநேரம், உங்களின் வெற்றிவேல் படத்தால் பல லட்சங்கள் நஷ்டம். அதனை வைத்துவிட்டு எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை வெளியிடுங்கள் என்று கட்டையை போட்டிருக்கிறது ஒரு குரூப்.

வியாபாரம்னு வந்தா ஒரு படத்தில் லாபம் வரும் ஒரு படத்தில் நஷ்டம் வரும். இரண்டையும் ஏற்றுக் கொள்வதுதான் வியாபாரம். அதைவிட்டு, நஷ்டம் வந்தால் நீ தரணும், லாபம் வந்தால் மொத்தமா நான் எடுத்துப்பேன் என்பது என்ன மாதிரியான வியாபாரம்?

லைக்கா இந்த விவகாரத்தை லைட்டா எடுத்துக் கொள்ளுமா இல்லை பிரச்சனை பெரிதாகுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

சசிகுமார் படத்தால் ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு சிக்கல்



பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரமாண்ட படம், ரெமோ.

கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு. இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ரெமோவின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை ஜுன் 9 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், மறுதேதி குறிப்பிடாமல் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

ஜுன் 9 -ஆம் தேதி கபாலி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளதால் ரெமோவின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது.

தள்ளிப் போனது ரெமோ பர்ஸ்ட் லுக் வெளியீடு - கபாலி காரணமா?



வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தனது காதலியுடன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மதனை தேடும் முயற்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர் சிவா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் வாரனாசி சென்றுள்ளனர். இவர்கள் தற்போது மதன் தங்கியிருந்த ஹோட்டல் அறையை கண்டுபிடித்தனர். ஆனால் அங்கு மதன் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய பெட்டி உள்ளிட்ட சில பொருட்கள் ஹோட்டல் அறையில் இருந்தன.

இந்நிலையில் அவர் குறித்த சில செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகையை வசூலித்து வந்ததாகவும், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவருடன் நெருங்கி பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த பணம் மற்றும் காதலியுடன் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

பலகோடி பணம் மற்றும் காதலியுடன் தலைமறைவானாரா மதன்?



மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக்கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது.

காளானின் மகத்துவங்கள்

காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோத்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.

பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும். மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும். இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடும்.

இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்



தற்போது, அதிமுக அமைச்சர்களுக்கு முன்பு, திமுக அமைச்சர்களுக்கு உதவியாளராக இருந்த சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க அதிமுக 134 தொகுதியில் வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இதனையடுத்து, அமைச்சர்கள் குழுவாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக அரசு அமைச்சர்களின் பிஏக்கள் நியமிக்கும் பணி நடைபெற்றது. இதில், கடந்த காலத்தில், திமுக அமைச்சர்களுக்கு உதவியாளர்களாராக சிலர் தற்போது உள்ள அதிமுக அமைச்சர்களுக்கும் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்களாம்.

இந்த தகவல் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கல்தா படலம் வராலம் என்கிறது கோட்டை வட்டாரம்.

அக்கப்போர் - அதிமுக அமைச்சர்களுக்கு திமுக உதவியாளர்கள்



இந்திய வரலாற்றில், இந்திரா காந்திக்கு ஒரு நீதி - ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில், ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார் பிரதமர் இந்திரா காந்தி.அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதி ஜெகன் மோகன்லால் சின்ஹா தீர்ப்பளித்தார்.

காரணம், இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய அரசின் கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூர் அவர்களை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களில் உத்தரப் பிரதேச அரசு செய்த ஏற்பாடுகளையும், போலீஸ் படைகளை அங்கு காவல் போட்ட வகையில் விதி மீறல் செய்தார் என்பதையும் நீதிபதி அப்போது தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அது போலவே, தற்போது 2016 ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதியோடு பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதற்குப் பின்பு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளைக் கேட்டு வந்தார். அவ்வாறு மே 14 ஆம் தேதி மதியம் 1.06 மணிக்கு அதிமுக தோழர்களுக்கு ஜெயலலிதா விடுத்த அறிக்கையை, போயஸ் கார்டனிலிருந்து, முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி, அரசிடமிருந்து மாதந்தோறும் ஊதியம் பெற்று வரும், தங்கையன் என்பவர், தலைமைச் செயலகத்திலுள்ள செய்தி வெளியீட்டுப் பிரிவுக்கு அனுப்புகிறார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இயக்குநர் குமரகுருபரன், கூடுதல் இயக்குனர் எழிலரசன், உதவி இயக்குநர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் கலைநேசன் (இவர் அதிமுக எம்எல்ஏ வின் தம்பி), அமைச்சர் வைத்திலிங்கத்தோட சொந்தக்காரரான உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராகுல் , நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவரான துணை இயக்குநர் செல்வராஜ், (இவர்கள் அனைவரும் அரசிடம் மாதந்தோறும் ஊதியம் பெறுவோராகும்) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, உடனே அனைத்து மாவட்ட பிஆர்ஓ அலுவலகங்களுக்கும் ஜெயலலிதாவின் கட்சி அறிக்கையை அனுப்பி, அதனை ஊடகங்களுக்கு அனுப்பச் செய்துள்ளனர்.

இது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக கழக அமைப்புச் செயலாளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருப்பார்கள். கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கைகளை எல்லாம் அந்தந்த கட்சி அலுவலகத்திலிருந்து தான் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் அதிமுக கட்சி சம்மந்தப்பட்ட அறிக்கையை கட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பாமல், அரசு மெயில் ஐடி மூலம் அனுப்பியுள்ளனர். இந்தச் செய்தி அப்போதே நக்கீரன், ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் விரிவாக தெளிவாக வெளிவந்தது.

1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதுபோலவே, தற்போது 2016 ஆம் ஆண்டு அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திரா காந்திக்கு ஒரு நீதி? ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா? கொதிக்கும் கருணாநிதி



வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வட்டியில்லா தவணைத் திட்டத்தை ப்ளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலை வகித்து வரும் நிறுவனம் மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வட்டியில்லா தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் வட்டித் தொகை செலுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது 5000 ரூபாய்க்கு மேல் போருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வட்டியுடன் தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதர்காகவும், அதிகரிக்கவும் இதுபோன்ற முறையை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி யார் வேண்டுமானாலும் எளிமையாக தவணை முறையில் கவலை இல்லாமல் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கலாம். ஆனால் பொருட்களின் விலை பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை.

மாத தவணையை பஜாஜ் பின்சர்வ் மற்றும் முக்கிய பிராண்டுகளுடன் இணைந்து சரி செய்து கொள்ளப்படும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்டியில்லா இஎம்ஐ வசதி: ப்ளிப்கார்ட் தகவல்



சிலை கடத்தல் வழக்கில் பிரபல நடிகைக்கு தொடர்பு உள்ளதால், அவரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சிலைகள் கடத்தி, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் பல லட்சம் மிதிப்பு கொண்ட பல சிலைகள் உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அப்போது, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கோடிக்கணக்கான மதிப்பு உள்ள இரும்பு மற்றும் கற்களால் உள்ளிட்ட 43 சுவாமி சிலைகளை போலீசார் பறிமுல் செய்தனர். சிலை கடத்தல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவான வீட்டின் உரிமையாளர் தீனதயாளனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அத்துடன், அங்கு பிரபல நடிகை ஒருவர் அடிக்கடி வந்து செல்வதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த நடிகைக்கும், சிலை கடத்தில் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நடிகை குறித்த விவரத்தை போலீசார் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்.

50 கோடி மதிப்புடைய சிலைகள் கடத்தல் : பிரபல நடிகை சிக்கினார்


நடிகர் சூர்யா இளைஞரை தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணி டிவிட்டரில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் ஒரு பெண்மணி ஓட்டிய கார் மீது, மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் மோதியதால், அந்த வாலிபருக்கும், அந்த பெண்மனிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த நடிகர் சூர்யா, அந்த இளைஞனை அடித்ததாகவும் கூறப்பட்டது.

அந்த வாலிபர் சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த வாலிபரை அடிக்கவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டது. அந்த வாலிபரும் சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பெண்மனி புஷ்பா கிருஷ்ணசுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“அந்த இரு இளைஞர்களும் என்னை பயமுறுத்தி மிரட்டிய போது, அவர்கள் கைகள் என் மீது படாமல் நடிகர் சூர்யா பார்த்துக் கொண்டார். அந்த வாலிபர்கள் என்னை மிரட்டினார்கள். என் கார் கண்ணாடியை உடைக்க முயன்றார்கள். மேலும், பாதுகாப்பு கருதி என்னுடைய காருக்குள் அமர என்னை அவர்கள் விடவில்லை. என்னிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர்.

நான் அந்த கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னை மிரட்டினார்கள்.

தன்னுடைய காரை நிறுத்தி இறங்கி வந்த சூர்யா, பெண்களை தொடக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். தக்க சமயத்தில் அவர் எனக்கு உதவி செய்தார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா விவகாரம் : சம்பந்தப்பட்ட பெண்மணி விளக்கம்



மனிதர்களின் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் சர்வதேச ரோபாடிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மனிதர்களின் சேவைக்காக ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

பெப்பர் என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்த இந்த ரோபோ ஆட்டம் ஆடி பலரையும் மகிழ்வித்தது.

மேலும் இந்த பெப்பர் ரோபோவை ரயில் நிலையங்களில் வழிகாட்டவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையிலும் பயன்படுத்தல்லம் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் ரோபோ



தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதும் கடிதங்களை குப்பைக்கு செல்கிறது என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்ட மன்றத் தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்கத் தவறிய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், தேமுதிக மற்றும் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது.இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரக்கு எழுதும் கடிதங்கள் குப்பைக்கு செல்கிறது என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவுக்காக வாய்ஸ் கொடுத்த வைகோ



அபராதத் தொகை ரூ. 4 கோடியே 75 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும் என்று வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலைஅமைப்பு, டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகக் கலாச்சார விழாவை நடத்தியது.

அப்போது, விழாவுக்காக, யமுனைநதிக் கரையில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டது. யமுனை ஆற்றில் மிதவைப் பாலமும் அமைக்கப்பட்டது.

மேலும், யமுனை நதியில் ரசாயனப் பொடிகளைத் தூவி இயற்கைத் தாவரங்கள் அழிக்கப்பட்டது. இந்த விழா குறித்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், இந்த விழாவிற்கு முன்பு, வாழும் கலை அமைப்பு ரூ. 5 கோடி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், 25 லட்சம் ரூபாயை மட்டும் செலுத்தி, மீதமுள்ள தொகையை விழாவுக்குப் பின்பு செலுத்துவதாக கூறியது. இதனால், விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விழா முடிந்த பின்பும், மீதித்தொகை செலுத்தவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அபராத தொகை ரூ.4.75 கோடியை உடனே கட்ட வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டது.

பிரபல ஆன்மீக இயக்கத்திற்கு ரூ.4.75 கோடி அபராதம்


Jayalalitha bought CM Post by Money | Seeman

Jayalalitha bought CM Post by Money | Seeman


T Rajendar ultimate Speech | DRUM Adipen DHUM Adikkamaten

T Rajendar ultimate Speech | DRUM Adipen DHUM Adikkamaten



Speed News 01-06-2016 - Puthiya Thalaimurai

Speed News 01-06-2016 - Puthiya Thalaimurai




Puthiya Thalaimurai Nerpada Pesu 01-06-16

Puthiya Thalaimurai Nerpada Pesu 01-06-16







 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

EMI Thavanai Murai Vazhkai Sun Tv Serial 01-06-16 Episode 62






Ayutha Ezhuthu 01-06-2016

Ayutha Ezhuthu 01-06-2016



4 Strong Reasons to watch Vijay Sethupathi, S. J. Surya and Bobby Simha's Iraivi - Thanthi TV




 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Aadhira Sun Tv Serial 01-06-16 Episode 296



தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்கு, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாயை நடிகை குஷ்பு வாங்கியதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

தமிழகரத்தில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நட்சத்திர பேச்சாளர் என்ற முறையில், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, ஒரு வேட்பாளருக்காக, ஒரு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு லட்ச ரூபாய் நடிகை குஷ்பு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுவரை யாரும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்றும், நடிகை குஷ்பு தான் இவ்வளவு பெரிய தொகை வாங்கியுள்ளார் என்றும், ஆனால், அந்த தொகையை கட்சி தலைமைக்கு கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டார் என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து நடிகை குஷ்பு இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவரது விளக்கத்தை பலரும் ஆவலுடன் எதிர்பாக்கின்றனர்.


ஒரு பாயிண்ட்-க்கு ஒரு லட்சம் - நடிகை குஷ்பு செய்த சேட்டை






 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 01-06-16 Raj Tv Serial Episode 713



Karthi Sivakumar Next Movie Updates..!



Breaking: Editor Praveen KL reveals about Kabali and Trailer cuts | Red Carpet Interview



Sivakarthikeyan new skill after Kamal Hassan in Remo | Hot Tamil Cinema News



Kollywood Galatta - KabaliAudio | SaiPallavi | Thala57 | Iraivi








Moondru Mudichu 01-06-16 Polimer Tv Serial Episode 1139






Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 01-06-2016 Episode 397



Yegirene Song | Okka Ammayi Thappa | Nithya Menen | Sundeep Kishan



SURIYA SLAP CASE - Nadanthadhu Enna?


Sundar C & VTV Ganesh praise Poonam Bajwa's beauty.



Moon Signs | Peppers Morning | May 31, 2016



Special report: People complain of artificial water scarcity in Coonoor







SOURCE – 02


Vijay Tv Show Neengalum Vellalam Oru Kodi 01-06-16



Special Report : Details of hike in petrol, diesel price